Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

செவ்வாய், 30 ஜனவரி, 2024

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!
குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது....!!
அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்......!! 

குடிக்கத் தண்ணீர் இல்லாமல்......,
அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.....!!
தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.....!! 
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.....!!
அங்கே ஆட்கள் யாரும் இல்லை.....!! 

நீங்கள் எப்படிப்பட்டவர்
ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் ..... ,
அருகே ஒரு ஜக்கில்,      தண்ணீரும் இருந்தன.....! 
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்....!

"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"....!
"குடித்து விட்டு " 
மறுபடியும் ஜக்கில்,
" தண்ணீரை நிரப்பி வைத்து விட்டு செல்லவும்."...!!!

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது.....!!
அதில் தண்ணீர் ஊற்றினால்..... ,
அது இயங்குமா...,
தண்ணீர் வருமா....,,
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது....!!

அது இயங்கா விட்டால்....,
அந்தத் கொஞ்ச தண்ணீரும் வீணாகி விடும்.....!!

அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்....... ,
தாகமும் தணியும்......!!
உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.....!!

அந்த பயணி யோசித்தான்....!!

தண்ணீரை குடித்து விடுவதே ....., 
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது........!!

ஆனால் ..
மனது நியாயமாக யோசித்தது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்......, அந்த பம்ப் இயங்குவதாக இருந்து,
அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரை நான் குடித்து விட்டால் ,
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.......!!

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு,
எந்த பயனும் இல்லாமல் போக....,
தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!! 

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.....!

ஆனது ஆகட்டும் என்று......,
அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு,
அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.....!! 
தண்ணீர் வர ஆரம்பித்தது....!!

தாகம் தீர,
வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு,
தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.....!!
அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்....,
அவன் மனம் நிறைந்திருந்தது.....!!

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை....,
பிறருக்கும்,
அதே போல பயன்படும்படி விட்டு போக வேண்டும்......!!
எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது....!!

 "அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன "....,
என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது....!!
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ....!!
என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்...,
"இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!

உண்மையில் இன்று நம் நிஜ வாழ்க்கையில் 99.99 சதவீத மக்கள் சுயநலத்திற்காக உள்ளார்கள்.
ஆனால் வெறும் 00.01 சதவீத மக்கள் மட்டுமே ...
பொது நலத்துடன் இருப்பதால் தான் என்னவோ.. இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல் இயங்குகிறது...
நீங்கள் எப்படிப்பட்டவர்??

👍

கிழக்கிந்தியக் கம்ப்பெனி உருவாக காரணம் என்ன?

வரலாறு
1592 - கிழக்கிந்தியக் கம்ப்பெனியைத் தொடங்குவதற்குத் தூண்டுகோலாய் இருந்த, மாட்ரே-டி-டியூஸ் என்ற ஸ்பானிய வணிகக் கப்பலை இங்கிலாந்து கைப்பற்றியமை நிகழ்ந்தது. 

1585-1604இல் நடைபெற்ற ஆங்கிலேய-ஸ்பானியப் போரின்போது கைப்பற்றப்பட்ட இந்த ஒரு கப்பலில் மட்டும் இருந்த அரை மில்லியன் பவுண்டு மதிப்புள்ள சரக்குகள், அன்றைய இங்கிலாந்து அரசின் கருவூலத்திலிருந்த மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட பாதி என்பதே, இங்கிலாந்தின் செல்வந்தர்களை கிழக்கத்திய நாடுகளுடனான(இந்தியாவுடனான!) வணிகத்தின்பால் திருப்பியது.

 ஃப்ளோரஸ் சண்டையில், ஐந்து மணி நேரம் போராடி, இந்தக் கப்பலைக் கைப்பற்றி, இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தபோது, இங்கிலாந்து அதுவரை கண்டிராத மிகப்பெரிய கப்பலாக இது இருந்தது. இந்தியா, சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கம், வெள்ளி, முத்துக்கள் என்று தொடங்கி, மிளகு, பட்டை, கிராம்பு என்று மிகநீண்ட பட்டியலாக இருந்த, 900 டன் விலை மதிப்புமிக்க பொருட்கள் மட்டுமின்றி, கப்பலிலிருந்த மாலுமியின் கையேடும் இந்தியா, சீனா, ஜப்பான் உடனான வணிகம் குறித்த பல்வேறு தகவல்களை அளித்து, ஆங்கிலேய வணிகத்தின் தொடக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.
 ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியர்களும் மட்டுமே அறிந்திருந்த பசிஃபிக் பெருங்கடலில் பயணித்த முதல் ஆங்கிலேயர் ஃப்ரான்சிஸ் ட்ரேக்தான். தொடக்கத்தில் அமெரிக்கக் கண்டத்திலிருந்த ஸ்பானியக் குடியேற்றங்களைக் கொள்ளையிட்டு, தங்கம்-வெள்ளியைக் கொண்டுவரவே சென்ற அவர், பின்னர் மணமூட்டிகள் தீவு என்றழைக்கப்பட்ட மலுக்கு தீவுகளுக்கு(இந்தோனேஷியா) சென்று கிராம்பு, ஜாதிக்காய் போன்றவற்றுடன் திரும்பியபோது, இங்கிலாந்தின் நாயகனாகவே கொண்டாடப்பட்டார் என்பதிலிருந்து, கடற்பயணங்களில் இங்கிலாந்துக்கிருந்த திறன் அவ்வளவுதான் என்பது புரியும். 

1588இல் இங்கிலாந்தின்மீது படையெடுத்துவந்த ஸ்பானியக் கப்பலணியை வென்று, சரக்குகளுடன் கப்பல்களைக் கைப்பற்றியபோதுதான் இங்கிலாந்தின் வணிகர்கள் முதன்முறையாக இந்தியாவுடனான வணிகம்குறித்துச் சிந்தித்தனர்.

 1591இல் அரசி அனுமதியளிக்க, மூன்று கப்பல்களில் ஜேம்ஸ் லங்க்காஸ்ட்டர் இந்தியா நோக்கிப் பயணித்ததே ஆங்கிலேயர்களின் முதல் இந்தியப் பயணம். வழியில் தென்பட்ட அனைத்துக் கப்பல்களையும் கொள்ளையிட்டு, இலங்கை, மலாய் தீபகற்பம் ஆகியவற்றை அடைந்து, திரும்பும் வழியில் பெரும் சேதங்களைச் சந்தித்து, வெறும் 25 பேருடன் 1594இல் லங்க்காஸ்ட்டர் இங்கிலாந்து திரும்பினார். ஆனாலும், இதற்கிடையில் கைப்பற்றப்பட்டிருந்த மாட்ரே-டி-டியூஸ் கப்பல், இந்தியாவுடனான வணிகத்தால் கிடைக்கும் பெரும் செல்வத்தை உணர்த்தியிருந்த நிலையில், லங்க்காஸ்ட்டரின் பயணத்தில் கிடைத்த அனுபவங்களையும், தகவல்களையும் அடிப்படையாகக்கொண்டே, ஆங்கிலேயர்களின் இந்திய வணிகம் தொடங்கப்பட்டது. 
1600இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்ப்பெனி தொடங்கப்பட, 

1602இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்ப்பெனியும் தொடங்கப்பட்டது!

ஆக்கம் : அறிவுக்கடல்